ராயபுரம் கடற்கரை….

இயற்கை அன்னையே! தாய் மடியென தஞ்சம் கொண்டோம், சேய் எங்களுக்கு தண்டனை ஏன்? ராட்சச அலைகளின் கோரத்தாண்டவம், உயிர் பறித்த உன் ஒய்யார ஆட்டம். கனவுடன், கடல் சென்ற மீனவ ஆண்கள், அவர்களின் நினைவுடன் அந்த பெண்கள், இவர்களின் நம்பிக்கைப் பூக்களாய் குழந்தைகள், அத்தனைப் பேரும் உனக்கு தாம்பூலமா? வாரி, சுருட்டி, முழுங்கி, பின் துப்பியதேன்? நான் மிதிவண்டி பழகிய காசிமேட்டுப் பாதை, கணக்கில்லா மீன்கள் குவியும் சந்தை, கடல் காற்றுக்காக பயணம் செய்த எண்ணூர் சாலை, [...]

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே….

மிக அரிதாக திரைப்பாடல் கேட்கும் நான், சமீபத்தில் ரசித்த ஒரு பாடலின் வரி வடிவம் இங்கே தந்திருக்கிறேன். இதை வரிவடிவத்தில் கோர்ப்பதற்காக அந்த பாடலை ஒரு 4 – 5 முறை கேட்டிருப்பேன். ஒரு நல்ல பாடலை நாமே முணுமுணுப்பதும் சந்தோஷமான விஷயம் தான் என்று உணர்ந்தேன். ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே, இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் [...]

நள்ளிரவில் சுதந்தரம்…

மீண்டும் ஒரு பெரிய இடைவெளி…..! ஒரு வழியாக “நள்ளிரவில் சுதந்தரம்” படித்து முடித்து விட்டேன். “ஒரு வழியாக” என்பது சலிப்பாக சொல்லும் வார்த்தை அல்ல. ஒரு பூரணமான நூலைப் படித்து முடிக்க எடுத்துக்கொண்ட கால அளவை சொல்லுவது அது! நூலில் இந்தியாவின் அரசியல் அதிகாரம் இங்கிலாந்திடமிருந்து இந்தியாவுக்கு கை மாறிய அந்த கால கட்டத்தை (1946-1948) அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறது. இந்த நூலாசிரியர்களின் (ஆங்கில மூலம்: டொமினிக் லேப்பியர் மற்றும் லாரி காலின்ஸ் [...]

புதிய புத்தகங்கள்….

இன்று இந்திய சுதந்தரநாள்! நேற்று சென்னை கன்னிமரா நூலகத்தின் பின்புறம் உள்ள நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். இதுபோன்ற ஒரு முயற்சிக்கு அரசுக்கு கட்டாயம் நன்றி சொல்லவேண்டும். அதுவும் குறிப்பாக அந்த காட்சியகத்தின் தலைமை அலுவலர்! நான் தேடிய புத்தகம் ஒன்று கிடைக்கவில்லை (ஜெயமோகனின் விஷ்ணுபுரம்). அந்த தலைமை அலுவலர், சிரத்தையெடுத்து பல பதிப்பகங்களுக்குத் தொலைபேசி மூலம் பேசி, அடுத்த வாரம் அந்த புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அரசு அலுவலகத்தில் இப்படிப்பட்ட கடமையுணர்வு நிச்சயமாகப் பாராட்டத்தக்கது. [...]

சம்பளப் போராட்டம் அல்ல, ஒரு சுயமரியாதைப் போராட்டம்!

மறுபடியும் ஒரு குட்டிக்கதை…. அதே புத்தகம்… இது நோபல் பரிசு வென்ற ஜகதீஷ் சந்திரபோஸ் பற்றியது… அப்போது அவர் லண்டனில் தன் படிப்பு முடித்து இந்தியா திரும்பியிருந்தார். அது வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட காலம். அவருக்கு கல்கத்தா மாநிலக்கல்லூரியில் அறிவியல் துறை பேராசிரியராகப் பணியாற்ற அழைப்பு வந்தது. இவரும் அந்த பணியில் சேர்ந்தார். இத்தனை உயர்ந்த பதவிகளில் அப்பொழுது பெரும்பாலும் வெள்ளைக்காரர்களே இருந்து வந்தனர். அதனால் கல்லூரி நிர்வாகம் மற்றும் நிறுவனருக்கு இந்தியரான போஸைப் பிடிக்கவில்லை. மற்றவர்களை [...]

  • RSS என் இணையத்தளத்தில்