கவிதை - குறிச்சொல் தொகுப்பு

என் தாய் எழுதிய கவிதை!

இதோ, என் தாய் எழுதிய கவிதை. இரண்டாம் வகுப்பே படித்திருந்தாலும், இந்த 62 வயதிலும் தன் உள்ளக்கிடங்கில் குடியிருக்கும் அம்மனை நினைத்து, பக்தியைத் தோய்த்து எழுதியுள்ளார். இது இவருக்கு முதல் கவிதையும் கூட. மஞ்சமாதா! எங்கள் மனக்கவலை நீக்கிடுவாள். அம்மா! நீ பூமியை காக்கும் தேவி. அம்மா! நாங்கள் உன் புகழைப் பாடிடுவோம். அம்மா! உன் சந்நிதிக்கு வருவோருக்கு செளபாக்கியம் தந்திடுவாய். அம்மா! அவள் மஞ்சள் பொடியை அள்ளி அள்ளிக் கொடுப்பாள். அம்மா! நல்ல நல்ல வரங்கள் [...]

ராயபுரம் கடற்கரை….

இயற்கை அன்னையே! தாய் மடியென தஞ்சம் கொண்டோம், சேய் எங்களுக்கு தண்டனை ஏன்? ராட்சச அலைகளின் கோரத்தாண்டவம், உயிர் பறித்த உன் ஒய்யார ஆட்டம். கனவுடன், கடல் சென்ற மீனவ ஆண்கள், அவர்களின் நினைவுடன் அந்த பெண்கள், இவர்களின் நம்பிக்கைப் பூக்களாய் குழந்தைகள், அத்தனைப் பேரும் உனக்கு தாம்பூலமா? வாரி, சுருட்டி, முழுங்கி, பின் துப்பியதேன்? நான் மிதிவண்டி பழகிய காசிமேட்டுப் பாதை, கணக்கில்லா மீன்கள் குவியும் சந்தை, கடல் காற்றுக்காக பயணம் செய்த எண்ணூர் சாலை, [...]

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே….

மிக அரிதாக திரைப்பாடல் கேட்கும் நான், சமீபத்தில் ரசித்த ஒரு பாடலின் வரி வடிவம் இங்கே தந்திருக்கிறேன். இதை வரிவடிவத்தில் கோர்ப்பதற்காக அந்த பாடலை ஒரு 4 – 5 முறை கேட்டிருப்பேன். ஒரு நல்ல பாடலை நாமே முணுமுணுப்பதும் சந்தோஷமான விஷயம் தான் என்று உணர்ந்தேன். ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே, இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் [...]

  • RSS என் இணையத்தளத்தில்