ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே….
மிக அரிதாக திரைப்பாடல் கேட்கும் நான், சமீபத்தில் ரசித்த ஒரு பாடலின் வரி வடிவம் இங்கே தந்திருக்கிறேன். இதை வரிவடிவத்தில் கோர்ப்பதற்காக அந்த பாடலை ஒரு 4 – 5 முறை கேட்டிருப்பேன். ஒரு நல்ல பாடலை நாமே முணுமுணுப்பதும் சந்தோஷமான விஷயம் தான் என்று உணர்ந்தேன். ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே! ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே, இரவானால் பகலொன்று வந்திடுமே! நம்பிக்கை என்பது வேண்டும் [...]