ஜனவரி 16 2007,
15:08 அன்று
மக்குசாமி,
புத்தக விமர்சனம் என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
வழக்கம் போல நீண்ட இடைவெளி. மீண்டும் ஒரு சரித்திரப் புத்தகத்தை கையில் எடுத்து பாதி முடித்தும் விட்டேன். இதற்கு முன் இந்திய அரசியல் சரித்திரத்தின் ஒரு பகுதியை (நள்ளிரவில் சுதந்தரம்) அமெரிக்க + ஐரோப்பிய எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் படித்தேன். இந்த முறை அமெரிக்காவின் முழு அரசியல் சரித்திரத்தை, பா.ராகவன் என்ற இந்தியரின் எழுத்தில் டாலர் தேசம் என்ற புத்தகத்தில் படித்து வருகிறேன். வலிமை மிக்க, கவர்ச்சியான பெயரோடு வந்திருக்கும் இந்த புத்தகம், படிக்க மிக எளிமையாக (சில [...]
ஜூன் 6 2006,
10:05 அன்று
மக்குசாமி,
புத்தக விமர்சனம் என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
நமது வாழ்க்கையில் சில பேரால் மட்டுமே மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுத்த முடியும். அப்படிப்பட்ட மிக சிலரில் சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகரும் ஒருவராகும். என்னை யாரும் பாதிக்கமுடியாது என்று கர்வத்துடன் என்னை நானே பலமுறை ஏமாற்றிக்கொண்டதுண்டு. அதில் நான் கண்ட மிகப்பெரும் தோல்வி சிவாஜியிடம்தான். அவரின் மரணத்தன்றுதான் என்னுள் அவரின் பிம்பம் ஒளிந்திருப்பதை முழுமையாக உணர்ந்துகொண்டேன். அவரின் திருவாயாலேயே அவரது சுயசரிதையை சொல்லவைத்து எழுதியுள்ளனர். பொதுவாக இந்த முறையில் சுயசரிதை எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. [...]
நவம்பர் 12 2004,
19:24 அன்று
மக்குசாமி,
கவிதைகள் என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
மீண்டும் ஒரு பெரிய இடைவெளி…..! ஒரு வழியாக “நள்ளிரவில் சுதந்தரம்” படித்து முடித்து விட்டேன். “ஒரு வழியாக” என்பது சலிப்பாக சொல்லும் வார்த்தை அல்ல. ஒரு பூரணமான நூலைப் படித்து முடிக்க எடுத்துக்கொண்ட கால அளவை சொல்லுவது அது! நூலில் இந்தியாவின் அரசியல் அதிகாரம் இங்கிலாந்திடமிருந்து இந்தியாவுக்கு கை மாறிய அந்த கால கட்டத்தை (1946-1948) அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறது. இந்த நூலாசிரியர்களின் (ஆங்கில மூலம்: டொமினிக் லேப்பியர் மற்றும் லாரி காலின்ஸ் [...]
ஆகஸ்ட் 15 2004,
10:24 அன்று
மக்குசாமி,
மற்றவை என்ற உட்பிரிவின் கீழ் பதிப்பித்தார்.
இன்று இந்திய சுதந்தரநாள்! நேற்று சென்னை கன்னிமரா நூலகத்தின் பின்புறம் உள்ள நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். இதுபோன்ற ஒரு முயற்சிக்கு அரசுக்கு கட்டாயம் நன்றி சொல்லவேண்டும். அதுவும் குறிப்பாக அந்த காட்சியகத்தின் தலைமை அலுவலர்! நான் தேடிய புத்தகம் ஒன்று கிடைக்கவில்லை (ஜெயமோகனின் விஷ்ணுபுரம்). அந்த தலைமை அலுவலர், சிரத்தையெடுத்து பல பதிப்பகங்களுக்குத் தொலைபேசி மூலம் பேசி, அடுத்த வாரம் அந்த புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். அரசு அலுவலகத்தில் இப்படிப்பட்ட கடமையுணர்வு நிச்சயமாகப் பாராட்டத்தக்கது. [...]